search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நொய்டா கட்டிட விபத்து"

    உ.பி மாநிலம் நொய்டாவில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
    லக்னோ :

    உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் உள்ள ஷா பரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் அதன் அருகாமையில் இருந்த 4 மாடி கட்டிடமும் சேர்ந்து இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

    இதில், 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்த 18 குடும்பங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருபவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ×